திருக்குறள்

1242.

காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு.

திருக்குறள் 1242

காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு.

பொருள்:

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

மு.வரததாசனார் உரை:

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

சாலமன் பாப்பையா உரை:

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.